search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்சார் பட்டேல்"

    • யாராவது ஒருவர் களம் இறங்கிய சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அக்சார் பட்டேலால் செய்ய முடியும்.
    • பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் பிரமாண்ட வீரர்.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் யார் யாரெல்லாம் இடம் பெற வேண்டும் என கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    அந்த அடிப்படையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் தனது கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    நிச்சயமாக அக்சார் பட்டேல் அணியில் இடம் பெற வேண்டும். என்னை பொருத்தவரைக்கும் ரிஷப் பண்ட், அக்சார் பட்டேல் என இருவரும் டி20-க்கான இந்தியா அணியில் நிச்சயமாக இடம்பெற வேண்டும். டி20 போட்டியில் ரோகித் சர்மா, யாராவது ஒருவர் 8-வது இடத்தில் களம் இறங்கி 15 முதல் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தால், அந்த பணியை அக்சார் பட்டேல் செய்வார். அவருக்கு யாராவது ஒருவர் களம் இறங்கிய சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அக்சார் பட்டேலால் செய்ய முடியும்.

    அதுதான் ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேலுக்கு சாதகமாகும். அவர்கள் அவரும் திறமையானவர்கள். மற்றும் இந்திய அணிக்காக பரிசு. பந்தை அடிக்கக் கூடிய திறன் இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் டெக்னிக்கிற்கு தேவையான நேரம் தேவையில்லை. போட்டிக்கான அடிப்படை இருக்க வேண்டும். அது அக்சாரிடம் உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங்கை பார்த்தீர்கள் என்றால், டர்னிங் ஆடுகளத்தில் நெருக்கடியின் கீழ் ரன்கள் அடித்திருப்பார். பேட்டிங் செய்யும் திறன் அவரிடம் உள்ளது. டி20-யில் அடித்து விளையாட வேண்டியது அவசியம். டி20-யில் அவரை சற்று முன்னதாக களம் இறக்கி செட்டில் ஆக கொஞ்சம் டைம் கொடுத்தால், அதன்பின் அவரால் அடித்து விளையாட முடியும்.

    பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் பிரமாண்ட வீரர். டி20 கிரிக்கெட்டிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் உள்ளது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    ×